1 7 scaled
உலகம்செய்திகள்

மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர்

Share

மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் எட்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் இளைஞர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிகாகோ புறநகர் பகுதியான ஜோலியட்டில் இரண்டு குடியிருப்புகளுக்குள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் பொலிசாரால் தேடப்படும் நபர், சடலமாக மீட்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர் என்றே அதிகாரிகள் நம்புகின்றனர்.

பொலிசாரால் தேடப்படும் நபர் 23 வயதான Romeo Nance என ஜோலியட் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த இளைஞரிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அவர் ஆபத்தான நபராக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜோலியட் டவுன்ஷிப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். 28 வயதான அந்த நபர் நைஜீரிய நாட்டவர் என்றும், கடந்த 3 ஆண்டுகளாக அவர் அமெரிக்காவில் குடியிருந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் பொலிசாருக்கு தெரியவந்தது.

தொடர்புடைய கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் வாகனம் ஒன்றை அடையாளம் கண்ட பொலிசார், அந்த வகானத்தின் உரிமையாளர் 23 வயதான Romeo Nance என பொலிசார் உறுதி செய்தனர்.

தொடர்ந்து அந்த நபரை விசாரிக்கும் பொருட்டு அவரது குடியிருப்பு முகவரிக்கு சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. Romeo Nance தொடர்புடைய இரண்டாவது குடியிருப்பிலும் தெருவிலும் ரத்தக்கறையை பொலிசார் கண்டுள்ளனர்.

உள்ளே சென்ற அதிகாரிகள் இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். அத்துடன் Romeo Nance-வின் குடியிருப்பில் இருந்தும் 5 சடலங்களை மீட்டுள்ளனர். மொத்தமாக 3 குடியிருப்புகளில் இருந்து 8 சடலங்களை இரண்டு நாட்களில் பொலிசார் மீட்ட நிலையில், தொடர்புடைய Romeo Nance தலைமறைவாகியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்தது.

இதனிடையே 42 வயதான ஒருவர் இச்சம்பவத்தில் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபருக்கும் Romeo Nance குடும்பத்தினருக்கும் தொடர்பில்லை என்றே விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...