24 661f6de7b2a11
உலகம்செய்திகள்

அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று?

Share

அழகான மனைவியுடன் வாழும்போது சோகமாகவே காணப்பட்ட சார்லஸ்: இன்று?

உலகமே, அழகி என வர்ணித்த இளவரசி டயானாவுடன் வாழும்போது சோகமாக காணப்பட்ட சார்லஸ், பிரித்தானியர்கள் வெறுத்த ஒரு பெண்ணை மணந்துகொண்டபின், இன்று மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.

பொதுவாகவே, இளவரசர் சார்லசும் டயானாவும் இணைந்திருக்கும் புகைப்படங்களைக் கவனித்தால், அவர்கள் இருவரும் மட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களில் கூட, இளவரசர் சார்லஸ் இறுகிய முகத்துடனோ அல்லது கடமைக்கு லேசாக புன்னகைக்கும் முகத்துடனோ மட்டுமே இருப்பதைக் காணலாம்.

பெரும்பாலான புகைப்படங்களில் டயானாதான் லேசாகவோ அல்லது கொஞ்சம் அதிகமாகவோ சிரிப்பார். அந்த காலகட்டத்தில் இளவரசர் சார்லஸ் வாய்விட்டு சிரிக்கும் புகைப்படங்கள் அபூர்வமாகவே வெளியாகியுள்ளன.

உலகமே பாராட்டும், அழகி என வர்ணிக்கும் ஒரு பெண்ணுடன் வாழும்போது, ஒருவர் எப்படி சோக முகத்துடனேயே நடமாடமுடியும்? ஆனால், சார்லஸ் அப்படித்தான் இருந்தார். அதற்குக் காரணம், அவர் அப்போது மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான்!

இப்போது, மன்னராகிவிட்ட சார்லசுக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது. ஆனால், வெளியாகும் புகைப்படங்களில், அவர் வாய்விட்டு சிரிக்கும் காட்சிகளே அதிகம் காணப்படுகின்றன.

உலகமே, அழகி என வர்ணித்த இளவரசி டயானாவுடன் வாழும்போது சோகமாக காணப்பட்ட சார்லஸ், பிரித்தானியர்கள் வெறுத்த பெண்ணான கமீலாவை மணந்துகொண்டபின் வாய்விட்டு சிரிக்கிறார். காரணம், அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

கமீலா, மன்னருடைய முதுகெலும்பு போல செயல்படுகிரார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Ingrid Seward. கமீலா மன்னரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார், மன்னர் மனம் விட்டு சிரிக்கக் காரணமாக கமீலா இருக்கிறார் என்கிறார் அவர்.

விரும்பாத ஒருவருடன் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என டயானாவின் வாழ்வை நினைவுகூரும் Ingrid Seward, கமீலா மன்னருக்கு எப்போதுமே ஆதரவாக இருப்பதுடன், அவரை மனதார புகழ்கிறார். அது மன்னருக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார். மக்களை சந்திக்கும்போது அவர் இப்படி புன்னகைத்துக்கொண்டும், கைகுலுக்கிக்கொண்டும் இருந்ததை நான் இதற்கு முன் பார்த்ததில்லை, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்கிறார் Ingrid Seward.

உண்மைதான், மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது கணவரான வில்லியம் மனைவியை கவனித்துக்கொள்ளச் சென்றுவிட, தன் காதல் கணவருக்கு பதிலாக, ராஜ குடும்ப பொறுப்புகளை தோள் மேல் ஏற்றிக்கொண்டு ஒற்றை ஆளாக கமீலா வலம் வருவதைத்தான் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறதே!

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...