tamilni 74 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய மகாராணியார் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லையாம்: வெளியாகியுள்ள புதிய தகவல்

Share

பிரித்தானிய மகாராணியார் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லையாம்: வெளியாகியுள்ள புதிய தகவல்

பிரித்தானிய மகாராணியார் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லையாம்: வெளியாகியுள்ள புதிய தகவல்

பிரித்தானிய மகாராணியார், டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லை, அவர் தனது இன்னொரு மகனுக்குத்தான் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பினார் என்னும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆண்ட்ரூவுக்குத்தான் டயானா பொருத்தமாக இருப்பார் என கருதியதாகவும், ஆகவே, ஆண்ட்ரூவுக்குத்தான் அவர் டயானாவைத் திருமணம் செய்துவைக்க விரும்பியிருப்பார் என்றும் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சார்லசைவிட டயானா 12 வயது இளையவர். ஆக, ஒரு சிறு பெண், வயதில் மிகவும் இளையவரான டயானாவால், எப்படி ஒரு இளவரசருக்கும், ஒரு கணவருக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளமுடியும் என மகாராணியார் எண்ணியதாகவும், ஆகவே, டயானா தனது இளைய மகனான ஆண்ட்ரூவுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என கருதியதாகவும் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Ingrid Seward என்பவர்.

மகாராணியார் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது. ஆம், ஒருமுறை, சார்லசையும் டயானாவையும் தனது பால்மோரல் இல்லத்துக்கு அழைத்திருக்கிறார் மகாராணியார். அங்கு சென்ற டயானா மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகத் துள்ளலுடன் காணப்பட்டாராம். அவர் இருந்த இடமெல்லாம் மகிழ்ச்சி பரவியதுபோலிருந்ததாம்.

ஆனால், சார்லசோ, உலகிலேயே அழகான ஒரு பெண்ணை தான் கண்டுபிடித்துவிட்டதுபோல காட்டிக்கொள்ளவில்லையாம். டயானாவைப்போல் அவர் மகிழ்ச்சியாக காணப்படவில்லையாம். திருமணத்துக்குப் பின்பும், ஒரு இளம் மனைவியான தன் மீது சார்லஸ் போதிய கவனம் செலுத்தவில்லை என டயானா கருதியதாக தெரிவிக்கிறார் Ingrid Seward.

ஆக, கடைசியில் சார்லசும் டயானாவும் பிரிந்ததுடன், அகால மரணமும் அடைந்துவிட்டார் டயானா!

 

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...