s scaled
உலகம்செய்திகள்

திருமணத்தன்று மொத்த குடும்பத்தையும் மின்னலுக்கு பறிகொடுத்த நபர்

Share

வங்கதேசத்தில் திருமணத்திற்காக படகில் சென்ற 16 பேர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவத்தில், தொடர்புடைய நபர் ஒருவர் முதன்முறையாக தமக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

21 வயதேயான மாமுன் தனது திருமணத்தன்று, தந்தை உட்பட தமது நெருங்கிய உறவினர்கள் 16 பேர்களை அடக்கம் செய்துள்ளார். சம்பவத்தன்று புத்தாடை உடுத்தி பெரும் மகிழ்ச்சியுடன் மாமுன் குடும்பத்தினர் 16 பேர்கள் படகில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் திடீரென்று புயலில் சிக்க, கன மழையில் படகு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து மாமுன் குடும்பத்தினர் ஆற்றங்கரையில் தகர கொட்டகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மின்னல் ஒன்று இவர்களின் தகர கொட்டகை மீது தாக்கியுள்ளது. இதில் 16 பேர்களும் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் ஆண்டுக்கு சராசரியாக 300 பேர்கள் மின்னல் தாக்கி பலியாகி வருகின்றனர் என்றே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021 ஆகஸ்டு மாதம் நடந்த சம்பவம் தொடர்பில் மாமுன் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். 21 வயதேயான மாமுன் வடமேற்கில் உள்ள ஷிப்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்போது தான் மொத்தமாக உலுக்கிய அந்த தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். மாமுன் தனது தந்தை உட்பட நெருக்கமான உறவினர்கள் 16 பேர்களை மொத்தமாக இழந்திருந்தார்.

திருமணப் பந்தலிலேயே சடலங்கள் நிரத்தப்பட்டு, அன்று மதியத்திற்கு பின்னர் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாமுன் பின்னர் திருமணம் செய்து கொண்டாலும், தமது திருமண ஆண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றே மாமுன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாசா, ஐ.நா மன்றம் மற்றும் வங்கதேச அரசாங்கம் ஆகியவை முன்னெடுத்த ஆய்வில், காலநிலை மாற்றத்தின் காரணமாக புயல்கள் அதிகரித்து, இதன் காரணமாக கொடிய மின்னல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...