s scaled
உலகம்செய்திகள்

திருமணத்தன்று மொத்த குடும்பத்தையும் மின்னலுக்கு பறிகொடுத்த நபர்

Share

வங்கதேசத்தில் திருமணத்திற்காக படகில் சென்ற 16 பேர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவத்தில், தொடர்புடைய நபர் ஒருவர் முதன்முறையாக தமக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

21 வயதேயான மாமுன் தனது திருமணத்தன்று, தந்தை உட்பட தமது நெருங்கிய உறவினர்கள் 16 பேர்களை அடக்கம் செய்துள்ளார். சம்பவத்தன்று புத்தாடை உடுத்தி பெரும் மகிழ்ச்சியுடன் மாமுன் குடும்பத்தினர் 16 பேர்கள் படகில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் திடீரென்று புயலில் சிக்க, கன மழையில் படகு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து மாமுன் குடும்பத்தினர் ஆற்றங்கரையில் தகர கொட்டகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மின்னல் ஒன்று இவர்களின் தகர கொட்டகை மீது தாக்கியுள்ளது. இதில் 16 பேர்களும் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் ஆண்டுக்கு சராசரியாக 300 பேர்கள் மின்னல் தாக்கி பலியாகி வருகின்றனர் என்றே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021 ஆகஸ்டு மாதம் நடந்த சம்பவம் தொடர்பில் மாமுன் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். 21 வயதேயான மாமுன் வடமேற்கில் உள்ள ஷிப்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்போது தான் மொத்தமாக உலுக்கிய அந்த தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். மாமுன் தனது தந்தை உட்பட நெருக்கமான உறவினர்கள் 16 பேர்களை மொத்தமாக இழந்திருந்தார்.

திருமணப் பந்தலிலேயே சடலங்கள் நிரத்தப்பட்டு, அன்று மதியத்திற்கு பின்னர் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாமுன் பின்னர் திருமணம் செய்து கொண்டாலும், தமது திருமண ஆண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றே மாமுன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாசா, ஐ.நா மன்றம் மற்றும் வங்கதேச அரசாங்கம் ஆகியவை முன்னெடுத்த ஆய்வில், காலநிலை மாற்றத்தின் காரணமாக புயல்கள் அதிகரித்து, இதன் காரணமாக கொடிய மின்னல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...