tamilni 41 scaled
உலகம்செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

Share

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க சர்வதேச தடகள அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுவதை அனைவரும் அறிவோம்.

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு பணம் எதையும் பரிசாக வழங்குவதில்லை.

தங்கள் நாட்டு வீரர் வெற்றி பெற்றதால், அதாவது, தங்கள் நாட்டுக்கு அவர்கள் பெருமை சேர்த்ததால், அந்தந்த நாடுகள் தங்கள் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகின்றன. அந்த தொகை, நாட்டுக்கு நாடு மாறுபடும்.

இந்நிலையில், சர்வதேச தடகள அமைப்பு (World Athletics, the international athletics federation), முதன்முறையாக, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவுசெய்துள்ளது.

அவ்வகையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், அதாவது, தடகளப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு, 50,000 டொலர்கள் ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள அமைப்பின் தலைவரான Sebastian Coe தெரிவித்துள்ளார்.

மேலும், Relay race போன்ற விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வெல்வோர், அந்த 50,000 டொலர்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.

அத்துடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது, வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கும் ரொக்கப்பரிசு வழங்க திட்டமிட்டுவருகிறது, சர்வதேச தடகள அமைப்பு.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...