tamilni 41 scaled
உலகம்செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

Share

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க சர்வதேச தடகள அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுவதை அனைவரும் அறிவோம்.

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு பணம் எதையும் பரிசாக வழங்குவதில்லை.

தங்கள் நாட்டு வீரர் வெற்றி பெற்றதால், அதாவது, தங்கள் நாட்டுக்கு அவர்கள் பெருமை சேர்த்ததால், அந்தந்த நாடுகள் தங்கள் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகின்றன. அந்த தொகை, நாட்டுக்கு நாடு மாறுபடும்.

இந்நிலையில், சர்வதேச தடகள அமைப்பு (World Athletics, the international athletics federation), முதன்முறையாக, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவுசெய்துள்ளது.

அவ்வகையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், அதாவது, தடகளப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு, 50,000 டொலர்கள் ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள அமைப்பின் தலைவரான Sebastian Coe தெரிவித்துள்ளார்.

மேலும், Relay race போன்ற விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வெல்வோர், அந்த 50,000 டொலர்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.

அத்துடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது, வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கும் ரொக்கப்பரிசு வழங்க திட்டமிட்டுவருகிறது, சர்வதேச தடகள அமைப்பு.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...