tamilnig 16 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

நடிகர் விஜய் கட்சியின் மீது பாய்ந்த முதல் வழக்கு

Share

நடிகர் விஜய் கட்சியின் மீது பாய்ந்த முதல் வழக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அனுமதியின்றி ஏற்றியதாக அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.

கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது.

கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் அனுமதியின்றி கட்சிக்கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம், நெடுமானூர் மட்டிகை ஆகிய ஊர்களில் விஜய் கட்சி சார்பில் நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கட்சிக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்சிக்கொடி ஏற்றிய விஜய் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு கட்சிக் கொடியும் அகற்றப்பட்டது.

அத்துடன் அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...