tamilni Recovered scaled
உலகம்செய்திகள்

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

Share

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

தென் கொரியாவில் நடுங்கவைக்கும் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்திய சாரதி கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் திங்களன்று இரவு பாதசாரிகள் பலர் சாலையை கடக்க கூட்டமாக காத்திருந்த நிலையில், டாக்ஸி ஒன்று வேகமாக அவர்கள் மீது பாய்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் தவறான திசையில் பயணித்துள்ளதும், வேறு இரு கார்கள் மீது மோதியுள்ளதும் தெரிய வந்தது. ஆனால் பாதசாரிகள் மீது மோதிய சம்பவத்தில் 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், சாரதி உட்பட 6 பேர்கள் காயங்களுடன் தப்பினர். அந்த சாரதி சம்பவயிடத்திலேயே கைது செய்யப்பட்டார். மேலும், அந்த சாரதி மது அல்லது போதை மருந்து பயன்படுத்தியதாக சோதனையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விசாரணையின் போது அந்த சாரதி கூறியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதாணைக்கு முயன்று வருவதாகவும், அதன் பின்னரே உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் வாகனமும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாரதி குறித்த தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்திருந்தாலும், உள்ளூர் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், அந்த நபர் 60 வயது கடந்தவர் என்றும், பேருந்து சாரதியாக பணியாற்றியவர் என்றும், சாரதியாக 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...