PTI11 10 2025 000418B
உலகம்செய்திகள்

புதுடெல்லி செங்கோட்டை அருகே சிற்றூந்து வெடிப்பு: தீவிரவாதத் தாக்குதலாகச் சந்தேகம் – 9 முதல் 13 பேர் பலி – நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Share

இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து வெடிப்புச் சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் பஹல்காமில் (Pahalgam) நடந்த தாக்குதலுக்கு எதிரான, இந்திய இராணுவத்தின் ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindhur) நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் பலியானோர் குறித்த தகவல்கள் வேறுபடுகின்றன; குறைந்தது 9 பேர் பலியானதாக இந்தியாவின் சில ஊடகங்களும், 13 பேர் இறந்ததாகத் தமிழகத்தை மையப்படுத்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.

டெல்லியில் சிற்றூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையிலேயே டெல்லியில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில், காஷ்மீர் – பரிதாபத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...