images 2 1
உலகம்செய்திகள்

72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

Share

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடல் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கேப்டன் அவர்களின் பூத உடல் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

கேப்டன் அவர்களின் இந்த இறுதிப் பயணமானது தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நிறைவு அடைந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்தின் நல்லடக்கம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களின் பெரும் திரளான கூட்டத்தால் இறுதிச் சடங்கு தாமதம் ஆகியுள்ளது.

இதற்கிடையில் இறுதிச் சடங்கு நடைபெறும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...