images 2 1
உலகம்செய்திகள்

72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

Share

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடல் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கேப்டன் அவர்களின் பூத உடல் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

கேப்டன் அவர்களின் இந்த இறுதிப் பயணமானது தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நிறைவு அடைந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்தின் நல்லடக்கம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களின் பெரும் திரளான கூட்டத்தால் இறுதிச் சடங்கு தாமதம் ஆகியுள்ளது.

இதற்கிடையில் இறுதிச் சடங்கு நடைபெறும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...