images 2 1
உலகம்செய்திகள்

72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

Share

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடல் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கேப்டன் அவர்களின் பூத உடல் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

கேப்டன் அவர்களின் இந்த இறுதிப் பயணமானது தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நிறைவு அடைந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்தின் நல்லடக்கம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களின் பெரும் திரளான கூட்டத்தால் இறுதிச் சடங்கு தாமதம் ஆகியுள்ளது.

இதற்கிடையில் இறுதிச் சடங்கு நடைபெறும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...