tamilni 385 scaled
உலகம்செய்திகள்

கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

Share

கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்!

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் – கஸ்தூரி தம்பதியின் இளைய மகன் சேவாக் (21).

சேவாக்கின் தாய் கஸ்தூரியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது சேவாக் சரியாக பதில் கூறாமல் போனை வைத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாக கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று அங்கு ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் வீட்டின் உள்பகுதியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளதைப் பார்த்து சந்தேகமடைந்த பொலிஸார், அங்கு தோண்டியபோது அதிர்ச்சியடைந்தனர்.

கஸ்தூரி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். கஞ்சா போதையில் இருந்த சேவாக் தாய் என்றும் பாராமல் அடித்துக் கொன்று புதைத்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் கஸ்தூரியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், கொலையாளியான சேவாக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் தனது தாயை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...