உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! கருத்து கணிப்பு

rtjy 256 scaled
Share

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! கருத்து கணிப்பு

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் குறித்த கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கருத்து கணிப்பில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும், முதல் இடத்தை அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

அதேபோல், அக்கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, 38, நிக்கி ஹாலே உள்ளிட்டோரும் போட்டியிடுவதற்காக, ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இவ்வாறான பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் சி.என்.என் பல்கலைக்கழகம் இந்த கருத்து கணிப்பினை நடத்தியுள்ளது.

இந்த கணிப்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பிற்கு குடியரசு கட்சியின் 39 சதவீத உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

விவேக் ராமசாமி தற்போதைய நிலையில் 13 சதவீத ஆதரவுடன், இரண்டாம் இடத்தில் உள்ளார். மற்றுமொரு இந்திய வம்சாவளி போட்டியாளரான நிக்கி ஹேலே 12 சதவீத ஆதரவுடன் 3வது இடத்திலும், நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிருஸ் கிறிஸ்டி 11 சதவீத ஆதரவுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...