download 27 1 1
உலகம்செய்திகள்

டால்க் பவுடரால் புற்றுநோய்!

Share

அமெரிக்காவைச் சேர்ந்த Johnson & Johnson என்ற மருந்தாக்க நிறுவனம் அனைவராலும் பயன்படுத்தப்படும் பவுடர் மற்றும் கிறீம் போன்ற பொருட்களை  தயாரித்து வருகின்றது.

இந்நிலையில்,  Asbestos என்னும் தாதுப்பொருட்கள் உள்ளடங்கிய  அந்த பவுடர் வகைகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக அதன் பயனாளர்கள் வழக்கு பதிவு செய்திருந்துள்ளனர்.

நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் பிற டால்க் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கியது என்ற குற்றச்சாட்டை தீர்க்க அடுத்த 25 ஆண்டுகளில்  8.9 பில்லியன் டொலரினை வழங்க  Johnson & Johnson மருந்தாக்க நிறுவனம் முன்வந்துள்ளது.

நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் அந்த வழக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அந்தத் தொகையை நிறுவனம் முன்மொழிந்துள்ளது.ஆயினும் அதற்கு நொடிப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.Asbestos தாதுப்பொருள் கலக்கப்பட்ட Johnson & Johnson டால்க் பவுடரைப் பயன்படுத்தியவர்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும்  பல்லாயிர கணக்கான வழக்குகளை நிறுவனம் எதிர்நோக்கி வந்துள்ளது.

ஆனால் அவற்றுக்குப் போதிய அறிவியல் ஆதாரம் இல்லை என்று நிறுவன வழக்காடலின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் எந்தத் தவறினையும்  ஒப்புக் கொள்ளவில்லை.

இருப்பினும்,  குழந்தைகளுக்கான டால்க் பவுடரின் விற்பனையை 2020 ஆம் ஆண்டு மே மாதமளவில்  அமெரிக்கா மற்றும்  கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...