8 34
உலகம்செய்திகள்

ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

Share

ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

பங்களாதேஷ் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்ட வன்முறையில் 400 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் (India) தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில் பங்களாதேசில் முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது கடவுச்சீட்டுளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப்...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...

25 691f13e047667
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் நகர மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது!

மாவீரர் வாரத்தையொட்டி, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று...