25 691a2855c9690
உலகம்செய்திகள்

அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியச் சுற்றுலாப் பயணிகள்: மெக்சிகோ பக்கம் திரும்பும் கவனம்!

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடும்போக்கு கொள்கைகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக, கனேடிய மக்கள் அமெரிக்காவிற்குச் சுற்றுலா செல்வதைப் புறக்கணித்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவை அமெரிக்காவின் ’51ஆவது மாகாணமாக’ இணைப்பதாக ட்ரம்ப் தெரிவித்த கருத்து கனேடியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அமெரிக்கா மீதான அதிருப்தியில் உள்ளனர்.

அமெரிக்காவிற்குச் செல்வதைத் தவிர்த்து வரும் கனேடிய சுற்றுலாப் பயணிகள், தற்போது தங்களது விருப்பமான சுற்றுலாத் தலமாக மெக்சிகோவைத் (Mexico) தெரிவு செய்துள்ளனர். அமெரிக்காவிற்குப் பதிலாக மெக்சிகோவின் கடற்கரைகள் மற்றும் கலாசார இடங்களுக்குச் செல்வதில் கனேடியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இருப்பினும், கனேடியர்கள் அமெரிக்காவை முழுமையாகக் கைவிடவில்லை. ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிந்த பிறகு, நிலைமைகள் சீரானதும் மீண்டும் அமெரிக்காவைத் தமது சுற்றுலாத் தளமாகத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகப் பல சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...