24 663d4fb76b887
உலகம்செய்திகள்

நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால் நான் இறந்திருப்பேன்! புற்றுநோயால் உயிரிழந்த கனேடிய டிக்டோக் பிரபலம்

Share

நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால் நான் இறந்திருப்பேன்! புற்றுநோயால் உயிரிழந்த கனேடிய டிக்டோக் பிரபலம்

கனடாவில் தனது மரணத்தை அறிவித்து டிக்டோக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

டிக்டோக்கில் பிரபலமான கிம்பர்லி நிக்ஸ் (28), செல் புற்றுநோயால் மூன்று ஆண்டுகளாக போராடி வந்தார்.

அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் குறித்து மக்களிடம் பேசினார். இதனால் அவரை பின்தொடர்ந்த 137,000 பேர் நிக்ஸின் நிலையால் வேதனையடைந்தனர்.

இந்த நிலையில் நிக்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது மரணத்தை அறிவித்தார். அவரது வீடியோவில்,

”இங்கே பயணம் முடிந்தது. நீங்கள் இந்த கிளிப்பைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் நிம்மதியாக இறந்துவிட்டேன்” என கூறியிருந்தார்.

முன்னதாக, நிக்ஸ் தனது புற்றுநோயை கண்டறியப்பட்ட பிறகு, இதேபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது பயணத்தை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

அதன்படி கிம்பர்லி நிக்ஸ் தன்னைப் பற்றிய பல விடயங்களை வீடியோ மூலம் பின்தொடர்பாளர்களிடம் பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில், கிம்பர்லி நிக்ஸ் (Kimberly Nix) தனது 31வது வயதில் ஆல்பர்ட்டாவில் உள்ள Calgaryயில் உயிரிழந்தார்.

Metastatic புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே தனது குறிக்கோளாக இருந்தது என்றும், அதில் குழுவாக வெற்றி பெற்றதாகவும், பாரிய உயரத்தை அடைந்ததாகவும் நிக்ஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...