07CANADA KILLING 01 facebookJumbo
உலகம்செய்திகள்

தன் குடும்பத்தையே வேன் மோதிக்கொன்ற கனேடியரை நேருக்கு நேராக பார்த்து வெளிநாட்டுப் பெண் கூறிய வார்த்தைகள்…

Share

கனடாவில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக்கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் ஒரு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், பாகிஸ்தானியர்களான Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman (44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9) மற்றும் Afzaalஇன் தாயார் Talat Afzaal, ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதியிருக்கிறார்.

வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர். தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்தான்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டNathaniel மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்களின் இழப்பு தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளை, நேற்று வியாழக்கிழமை, நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள், அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும்.

அப்போது, கொல்லப்பட்ட Talat Afzaalஇன் மகளான Tabinda Bukhari, குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து, நீ என் தாய் மீது வேனை மோதி அவருக்குக் கொடுத்த வேதனையை என்னால் அளவிடமுடியாது, உன் முன்னால் நின்று சொல்கிறேன், நீ எங்களிடமிருந்து விலைமதிப்பில்லாத ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டாய் என கண்ணீரை அடக்க முடியாமல் குமுறினார்.

எந்த குறுக்குச் சாலையில் நின்றாலும், உயிரிழந்த என் தாய், என் சகோதார், அவருடைய மனைவி, அவர்களுடைய மகள் என அவர்கள் அனைவரும் என்னுடன் நிற்பது போன்ற உணர்வை என்னால் தவிர்க்கவே முடியவில்லை என்கிறார் Tabinda.

அவர் கூறியதை, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் கேட்டுக்கொண்டிருந்த Nathanielக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அவரது செயல்கள் தீவிரவாதச் செயல்களா என்பது குறித்து நீதிபதி Renee Pomerance விரைவில் முடிவு செய்ய உள்ளதால், அவரது முடிவுக்கேற்ப Nathanielஇன் தண்டனை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம், அதாவது, ஜனவரி 23ஆம் திகதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...