24 663e8b274cadb
உலகம்செய்திகள்

ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா உதவி

Share

ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா உதவி

உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 76 மில்லியன் கனேடிய டொலர்களை(55 மில்லியன் அமொரிக்க டொலர்) உதவியாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் இடம்பெற்ற ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் உடனான சந்திப்பைத் தொடர்ந்து பில் பிளேர்(Bill Blair) ஒரு அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”ஜெர்மனியின் முயற்சியில் கனடா இணையும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது உக்ரைனுக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாகவழங்க சர்வதேச சமூகத்திடம் இருந்து பணம் மற்றும் வளங்களை திரட்டுகிறது.

ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களைக் கொன்றது மற்றும் மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை அழித்த ரஷ்ய வான்வழி தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிரான உதவியாகும்” என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனேடிய ஆயுதப்படை வீரர்கள் இப்போது ஜெர்மனியில் பாதுகாப்பு உதவிக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், இது உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கு உதவுகிறது என்றும் ஆயுதப்படைகளுக்கு உடனடி மற்றும் நீண்ட கால பயிற்சி தேவைகளை திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 17 அன்று, ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்க கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கண்டறியும் முயற்சியைத் ஆரம்பித்தது.

டென்மார்க் மற்றும் நெதர்லாந்துடன் நிதி முயற்சிகளை ஆராய்வதாக ஜேர்மனி முன்னர் அறிவித்திருந்தது. மேலும், ஜெர்மனியின் முயற்சிக்கு 200 மில்லியன் யூரோக்கள் பங்களிப்பதாக ஏப்ரல் மாதம் பெல்ஜியம் கூறியாமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...