3 18
உலகம்செய்திகள்

கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

Share

கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் அமைச்சர் Randy Boissonnault முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை புதிய விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை தவிர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை பயன்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடிய மக்கள் தொகையில் 6.8 சதவீதமாக உள்ளனர் என அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது.

கனடாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் அதனை பலர் மோசடியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...