23 6
உலகம்செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா

Share

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய அரசாங்கம் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது.

இதனால், 2025ல் 437,000 கல்வி அனுமதி மட்டுமே சர்வதேச மாணவர்களுக்கு கனடா அளிக்க உள்ளது. இது 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் குறைவு.

சமீபத்திய ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி வீட்டுவசதி பற்றாக்குறையை அதிகரிப்பதாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, 2024 ல் புதிய சர்வதேச மாணவர் அனுமதிகளுக்கு உச்சவரம்பை கனடா அறிமுகப்படுத்தியது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் பதவியை விட்டு விலகுவாதாக அறிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சமீபத்திய மாதங்களில் குடியேற்ற அளவைக் குறைப்பதாக உறுதியளித்திருந்தார்.

கனடாவில் புதிதாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதும் காரணமாக கூறப்படுகிறது. 2023 ல், 650,000 க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்விக்கான அனுமதிகளை வழங்கியதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்தோரால் மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிக்க சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வீட்டுச் செலவுகளை அதிகரிக்க செய்தது.

இருப்பினும், உள்நாட்டு மாணவர்களை விட சர்வதேச மாணவர்கள் கணிசமாக அதிக கல்விக் கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கான உச்சவரம்பு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து,

பெரும்பாலான கல்வி அனுமதி விண்ணப்பதாரர்கள் தற்போது மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கும் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சான்றளிப்பு கடிதங்கள், பெடரல் அரசின் சர்வதேச மாணவர் உச்சவரம்புக்குள் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...