7 2
உலகம்செய்திகள்

வாகனத்திருட்டுக்களை குறைப்பதற்கு கனேடிய தமிழ் புலம்பெயர் அமைச்சர் எடுத்த நடவடிக்கை

Share

திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தின் சட்டவிரோத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களை நாங்கள் தடுத்து, திருட்டுகள் நடப்பதற்கு முன்பே அவற்றைத் தடுக்க பொலிஸாருக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றோம்” என்று கனேடிய அமைச்சர் விஜய் தணிகாசலம்(Vijay Thanigasalam) தெரிவித்துள்ளார்.

திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முன்னெடுத்துள்ளது.

இதற்கிணங்க கீழ்வரும் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. வாகனத் திருட்டில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் ‘கீ ஃபோப்’ நிரலாக்க சாதனங்கள் மற்றும் ‘ஸ்கேனர்கள்’ போன்ற பொருட்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும்.

சட்ட நடைமுறையாக்கத்தை ஆதரிப்பதற்கும் அதிகளவில் திருட்டு நடைபெறும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு புதிய பெரிய வாகனத் திருட்டு வழக்கு விசாரணை குழு நிரந்தரமாக்கப்படும்.

இம்முயற்சி ஒன்ராறியோ எங்கும் வாழும் மக்கள் தங்கள் சமூகங்கள் தீவிரமாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...