7 4
உலகம்செய்திகள்

கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல்

Share

கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல்

கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக கனடாவில் உணவகங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவோருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டிய நிலை ஏற்படும் என, பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாகவுள்ளது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு வருடத்துக்குதான் பணி அனுமதிகளும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறான நிலையில் பணி வழங்குவோர், புதிதாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசின் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாக இருப்பதுடன், பல தொழில்கள் மூடப்படும் அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 22 1
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடிப்பு! – தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பீதி; 3 கி.மீ தூரத்திற்குத் தடை!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று...

image 1200x800 21 1
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களின் ரகசியத் திட்டம் இதுதான்! – இறுதிப்போர் குறித்த அதிரடி காணொளியை வெளியிட்டார் சரத் பொன்சேகா!

2009-ஆம் ஆண்டு ஈழப்போரின் இறுதித் தருணங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைக் காப்பாற்றுவதற்கு ராஜபக்ச...

image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...