images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

Share

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இந்த மாதம் பொது மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செனட்டின் (Senate) மதிப்பாய்வில் உள்ளது.

இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டவுடன், பின்வரும் பிரிவினர் குடியுரிமை பெற உரித்துடையவர்களாக மாறுவார்கள். கனேடிய பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள். கனேடிய பெற்றோரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்.

ஒரு கனேடிய பெற்றோர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அல்லது தத்தெடுப்பதற்கு முன்பு கனடாவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வசித்திருந்தால், அந்தக் குழந்தை குடியுரிமைக்குத் தகுதி பெறும்.

பழைய விதிகளின் கீழ் குடியுரிமையை இழந்தவர்களுக்கும் இது குடியுரிமையைப் பெற உதவும்.

இந்த புதிய விதிகள், குடும்பங்களை மீண்டும் இணைப்பதோடு, கனடாவில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் அனைத்துக் கனேடியர்களுக்கும் சம உரிமைகள் இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற, பெற்றோரின் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரம், கனடாவில் செலவழித்த நேரத்தைக் காட்டும் ஆவணங்கள் மற்றும் பிறப்பு அல்லது தத்தெடுப்பு பதிவுகள் போன்ற ஆதாரங்கள் தேவைப்படும்.

செனட் ஒப்புதல் மற்றும் அரச ஒப்புதலுக்குப் பிறகு 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லதண்ணி – நுவரெலியா பிரதான வீதியில் மகிழுந்து விபத்து: மூவர் காயம்!

நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 15...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...

13 11
செய்திகள்உலகம்

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: நான்கு வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்க இராணுவம் உறுதி!

மேற்கு ஈராக் வான்பரப்பில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘போயிங் KC-135 Stratotanker’ ரக எரிபொருள் நிரப்பும்...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...