24 661837b2979e5
உலகம்செய்திகள்

கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி!

Share

கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி!

கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனேடியன் இம்பிரியல் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி,வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76 வீதமான கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்,70 வீதமானவர்கள் வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான பிரதான தடையாக சந்தையில் விலை அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத்தினரிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றால் மட்டுமே தம்மால் வீடுகளுக்கு உரிமையாளராக முடியும் என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 55 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயமாகவே இதுவரையில் வீடு கொள்வனவு செய்யாதவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...