கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
உலகம்செய்திகள்

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

Share

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா முழுதும்அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவின் மேற்கு கெலோனா நகரத்தில் தீயானது வேகமாக பரவி வருவதால் 2,400 வீடுகளில் வசிக்கும் சுமார் 36,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ வேகமாக பரவி வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் விமானங்கள் ஊடாக வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீப்பரவல் காரணமாக வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகப்படும் எனவும், சுமார் 15,000 – 20000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...