25 68336104778b4
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம்

Share

கனடாவின்(Canada) பிரபல ஊடகவியலாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான எவன் சாலமன், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் நவீனத்துவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 மே 13 அன்று, கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக ஈவன் சாலமனை(Evan Solomon) நியமித்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விழாவில், ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரான சாலமன் பதவியேற்றுள்ளார்.

டிஜிட்டல் புரட்சியை வரவேற்கும் வகையில், கனடா அரசு முக்கியமான ஒரு புதிய பொறுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய அமைச்சு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி, நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை (AI) நிர்வகிப்பதும், அதன் சட்ட மற்றும் சமூக தாக்கங்களை கவனிப்பதும் இந்த அமைச்சின் முக்கிய பொறுப்பாகும்.

சமீப காலமாகவே கனடா, உலகின் முன்னணி டிஜிட்டல் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக மாற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,இந்த அமைச்சின் உருவாக்கம் இதற்கான ஒரு தீர்வான வழியைத் திறக்கிறது எனக் கருதப்படுகிறது.

கனடாவின் இந்த தீர்மானம், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக இருக்கக்கூடும் என தொழில்நுட்பத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...