1 4 scaled
உலகம்செய்திகள்

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்த இந்தியருக்கு அனுமதி: கனடா சர்ச்சை முடிவு

Share

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்த இந்தியருக்கு அனுமதி: கனடா சர்ச்சை முடிவு

கனடா இந்திய தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஒரு சூழலிலும், தன் வீட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தங்க அனுமதியளித்த இந்தியர் ஒருவரை கனடாவுக்குள் நுழைய அனுமதிப்பது என கனடா முடிவு செய்துள்ளது.

Kamaljit Ram என்பவர், 1982 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு தனது வீட்டில் இடமளித்து, அவர்களுக்கு உணவு முதலான விடயங்களையும் வழங்கிவந்துள்ளார்.

அவர் 10 ஆண்டுகளாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு இடமளித்தவர் என்பது தெரியவந்ததால், அவரை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என கனடா அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் தீர்ப்பாணையம் ஒன்று, கனடா அரசின் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளது.

கமல்ஜீத் ராம், ஆயுதங்களுடன் வந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தன்னிடம் தங்குவதற்கு இடம் கேட்டபோது, அவர்களுக்கு இடமளிக்காவிட்டால் தனக்கு ஆபத்து நேரிடும் என பயந்தே அவர்களுக்கு இடமளித்ததாக கூறி, புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் தீர்ப்பாணையம் அவரை கனடாவுக்குள் அனுமதிக்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதற்கு இந்தியா மீது கனடா பழி சுமத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சர்ச்சைக்குரிய முடிவை கனடா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 15
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு: இந்தியா டுடே கான்க்ளேவில் நாமல் ராஜபக்ஷவின் முக்கிய உரை!

புது தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில்...

02 14
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை: அமெரிக்க போர் விமானங்களின் பயணங்களுக்குத் தடை!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வான்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்க...

01 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் மீண்டும் QR முறை: இன்று முதல் அமுல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக்...

25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...