13 23
உலகம்செய்திகள்

கலிபோர்னியாவில் மீண்டும் அதி தீவிர அச்சம்… காற்று தீவிரமடைய வாய்ப்பு

Share

கலிபோர்னியாவில் மீண்டும் அதி தீவிர அச்சம்… காற்று தீவிரமடைய வாய்ப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 என அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால், ஏற்கெனவே எரிந்து வரும் நான்கு காட்டுத் தீயை மேலும் தீவிரமாக்கும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமைக்கு பின்ன்னர் காற்றின் வேகம் குறையும் என்ற நம்பிக்கையால் தீயின் தீவிரம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், தீயைக் கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்களின் பணிகளைக் குறைக்க மழையின் தயவை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, காட்டுத் தீக்கு 25-வது நபர் மரணமடைந்துள்ளதை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நகரின் வடக்கில் உருவான ஈட்டன் காட்டுத் தீ பாதிப்பில் சிக்கியவர்கள், இந்தக் காட்டுத் தீ 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை ஏரித்துள்ளது. இதில் 35 சதவீதம் தீ, தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

நகரின் மேற்கு பகுதியில் உருவான பெரிய அளவிலான பாலிசேட்ஸ் காட்டுத் தீக்கு 23,000-க்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இதில் 18 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இரண்டு காட்டுத் தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், ஈட்டன் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குடியிருப்புகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை காற்று தீவிர பாதிப்புக்கு பின்பு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காற்றின் தாக்கம் குறையும் என்றாலும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், காட்டுத் தீயை உண்டாக்கியதாக கூறப்படும் சாண்டா அன்னா காற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உருவாகலாம் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 88,000 பேர் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் இருந்தனர். தீ பரவினால் மேலும் 84,000 பேருக்கு புதிய வெளியேற்ற உத்தரவு வழங்கப்படும் அபாயம் உள்ளது என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...