14 15
உலகம்செய்திகள்

டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ஊழியர்களுக்கு திடீர் சுகயீனம்

Share

டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ஊழியர்களுக்கு திடீர் சுகயீனம்

டிக்டொக்கின் (TikTok) தாய் நிறுவனமான ‘ByteDance’ இன் சிங்கப்பூர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், உணவு நச்சுத்தன்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தில், நேற்று (30.07.2024) செவ்வாயன்று 60 பேர் வரை இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டமை குறித்து, சிங்கப்பூரின் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், பைட் டான்ஸ், தனது ஊழியர்கள், நோய்வாய்ப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளது.

பைட் டான்ஸ் அலுவலகங்களில் எந்த உணவும் தயாரிக்கப்படுவதில்லை. எனினும், உணவு வழங்குவதற்கு மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எனவே, இதற்கு உணவு நஞ்சாதல் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீன தொழில் முனைவோரால் 2012இல், சிங்கப்பூர் அலுவலகம் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...