tamilni 428 scaled
உலகம்செய்திகள்

வாங்க பிஸினஸ் செய்யலாம்… அழைக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

Share

வாங்க பிஸினஸ் செய்யலாம்… அழைக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

ஒருபக்கம் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர் முதலானோர் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம், பிரித்தானியாவுக்கு வாங்க, பிஸினஸ் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.

அது பிரித்தானியாவானாலும் சரி, கனடாவானாலும் சரி, ஆட்சி பீடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் நிலை திண்டாட்டம்தான் போலிருக்கிறது.

ஒரு பக்கம், நாட்டுக்கு வெளிநாட்டு வருவாய் வேண்டும், மறுபக்கம், அரசியல்வாதிகளையும், மக்களையும் திருப்திப்படுத்துவதற்காக புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும், என திண்டாடத்தான் செய்கிறார்கள் தலைவர்கள்.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எல்லை மீறிப்போய்விட்டது. அதனால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை மட்டுமல்ல, சட்டப்படி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோரையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார் புதிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.

ஆனால், புலம்பெயர்ந்தோரே இல்லையென்றால் நாட்டுக்கு எப்படி வருமானம் வரும்? பிரித்தானியர்களால் எல்லா துறைகளிலுமுள்ள, எல்லா அலுவலக இருக்கைகளையும் நிரப்ப முடியாது. நிச்சயம் வெளிநாட்டவர்களை பணிக்கமர்த்தித்தான் ஆகவேண்டும்.

ஆக, பெரிய சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் விசா வழங்கலாம் என ஒருபக்கம் பேச்சு போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள புதுமைக்கு வழிவகுக்கும் நிறுவனங்களில் பாதி நிறுவனங்களின் நிறுவனர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தவர் என்று கூறி, புலம்பெயர்தலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.

நீங்கள் புதுமைக்கு வழிவகுக்கும் கொள்கை கொண்டவராக இருந்தாலோ, தொழிலதிபராகவோ, ஆராய்ச்சியாளராகவோ இருந்தால், சர்வதேச மிகுதிறன் கொண்டோருக்கு பிரித்தானியாவில் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் ரிஷி.

அதாவது, எளிய வார்த்தைகளில் சொல்லால், திறமை மிக்க தொழிலதிபர்கள் முதலானோர் பிரித்தானியாவுக்கு வாருங்கள், தொழில் செய்யலாம் என்கிறார் ரிஷி!

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...