23 64fc642cc72f4
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்:

Share

உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்:

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் ஒருவர், நீர் நிலை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள Burnley என்னுமிடத்தைச் சேர்ந்த ஜோர்டன் (Jordan Chadwick, 31) 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்காக உக்ரைன் சென்றுள்ளார்.

அவர் 2011 முதல் 2015 வரை பிரித்தானிய ராணுவத்தில் சேவை புரிந்தவர் ஆவார். சிறு வயதிலிருந்தே ராணுவ வீரராக வேண்டும், சுதந்திரத்துக்காக பாடுபடவேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட ஜோர்டன், அக்டோபர் 2022இல் உக்ரைனுக்குச் சென்றதாக அவரது தாயாகிய பிரெண்டா (Brenda Chadwick) கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜூன் மாதம், 26ஆம் திகதி நீர் நிலை ஒன்றில், கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஜோர்டன்.

அவரது மரணம் தொடர்பான விசாரணை ஒன்று, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட உள்ளது.

தன் மகனுடைய தைரியம் மற்றும் மனம் தளராமை ஆகிய குணங்களால் தாங்கள் பெருமிதம் அடைந்தாலும், அவரது மரணம் தங்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜோர்டனின் தாயாகிய பிரெண்டா.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...