tamilni 387 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்லவேண்டியிருக்கும்… எச்சரிக்கும் ராணுவ தலைவர்

Share

பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்லவேண்டியிருக்கும்… எச்சரிக்கும் ராணுவ தலைவர்

போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற கருத்தை பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று, பிரித்தானிய படைகளின் தலைவரான General Sir Patrick Saunders, பொதுமக்களுக்கு உரை ஒன்றை ஆற்ற இருப்பதாக The Daily Telegraph என்னும் பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

சர் பாட்ரிக், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை கொடுக்க இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும், ஏனென்றால், பிரித்தானிய ராணுவம் மிகவும் சிறியதாக உள்ளது என அவர் மக்களை எச்சரிக்க இருக்கிறாராம்.

இந்நிலையில், பிரித்தானிய படைகளின் தலைவரின் கூற்றை ஆதரித்து,கருத்தொன்றை முன்வைத்துள்ளார் பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான Tobias Ellwood.

அதாவது, பிரித்தானிய படைகளின் தலைவரான சர் பாட்ரிக் கூறுவதை கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ள Tobias, அவர் புத்தியும் யுக்தியும் கொண்டவர்களில் ஒருவர் என்கிறார்.

அவர் சொல்வதுபோலவே, எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்னும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்துவருகிறோம். பனிப்போர்க் காலத்துக்குப் பின் நமது ராணுவம் முன்னிருந்த நிலையில் இல்லை. அது மிகவும் சுருங்கியிருக்கிறது. ஆகவே, நாம் நமது ராணுவத்தை போருக்கு தயார் செய்யவேண்டும் என்கிறார் Tobias.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...