24 66798905f37bb 1
உலகம்செய்திகள்

பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி

Share

பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய(United Kingdom) இளவரசி ஏன்(Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

73 வயதான இளவரசி ஏன்(Anne) தனது காட்கோம்பே பார்க் தோட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு முழு மற்றும் விரைவான குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை,

எனினும், அவரின் காயங்கள் குதிரை ஓட்டத்தின் போது குதிரையின் தலை அல்லது கால்களின் தாக்கத்தினால், ஏற்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் இளவரசி ஏன், இந்த வார இறுதியில் கனடாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கவிருந்ததாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....