24 66350d7b7737f
உலகம்செய்திகள்

அடையாள அட்டையை மறந்து வாக்குச்சாவடிக்கு சென்ற பொரிஸ் ஜோன்சன்

Share

அடையாள அட்டையை மறந்து வாக்குச்சாவடிக்கு சென்ற பொரிஸ் ஜோன்சன்

அடையாள அட்டையை மறந்து வாக்களிப்பதற்காக உள்ளூர் வாக்குச்சாவடிக்கு சென்ற பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிகாரிகள் திருப்பியனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பொரிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர மறந்ததால், அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க சென்றபோதே பொரிஸ் ஜோன்சன் இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இதன்பின்னர் பொரிஸ் ஜோன்சன், ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்களித்துள்ளார்.

2022 இல் பிரித்தானிய பிரதமராக இருந்த போது வாக்களிக்க அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்ற சட்டத்தை ஜோன்சன் இயற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...