11 4
உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

Share

இங்கிலாந்தில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

தென்மேற்கு இங்கிலாந்தில்(England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான அவர், 61 மற்றும் 71 வயதான இருவரை கொலை செய்து அவர்களின் உடல்களின் துண்டுகளை, இரண்டு பயணப்பைகளுக்குள் பொதியிட்டு பின்னர் பாலம் ஒன்றின் அருகில் அவற்றை விட்டுச்சென்றுள்ளார்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவர் இன்று(15) லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

குறித்த சந்தேக நபர் , கொலை செய்யப்பட்டவர்களுடன் முன்னர் ஒன்றாக வாழ்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் கிளிஃப்டன் தொங்கு பாலத்தின் அருகில் இரண்டு பயணப்பைகளில் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னரே சந்தேகநபர், கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் லண்டனில் உள்ள குறித்த இருவரின் வீட்டில் மேலும் சில உடல் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...