tamilni 361 scaled
உலகம்செய்திகள்

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம்

Share

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம்

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரங்களின் பட்டியில், நியூ யோர்க் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன்படி, சுமார் 340 ஆயிரம் மில்லியனர்கள் தற்போது நியூ யோர்க் நகரில் வாழ்கின்றனர். இது நியூ யோர்க்கின் மொத்த சனத்தொகையில், 4 வீதம் என இணையதரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், மில்லியனர்கள் மாத்திரமின்றி சுமார் 58 பில்லியனர்களும் நியூ யோர்க்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார நிலை மேம்பட்டு வரும் நிலையில், புதிதாக உருவாகும் மில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 2010 ஆம் மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதிக்குள் 65 வீதத்தால் மில்லியனர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்த வரிசையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்நிற்கின்றன.

டோக்கியோ
இந்த நிலையில், அதிக மில்லியனர்களை கொண்ட நாடாக கடந்த சில காலங்களாக முதலிடத்தில் இருந்த டோக்கியோ, தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டோக்கியோவில் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லியனர்கள் இருந்துள்ளனர்.

எனினும், தற்போது உலகளாவிய நிதி மையமாக காணப்படும் நியூயோர்க்கி, அதிகளவான மில்லியனர்களை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து, தி பே ஏரியா, லண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்கள் அதிக மில்லியனர்கள் வாழும் பட்டியலில் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

billionaires wealthiest cities world

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...