tamilni 220 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா

Share

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா

பிரான்ஸ் செனேட்டர்கள், புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா தொடர்பில் நடத்திய விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தின் மேலவையில் நடைபெற்றுள்ளது.

மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள். 210 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 115 பேர் எதிராகவும் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மசோதா, புலம்பெயர்தலைக் கடினமாக்கும் நோக்கத்துடனேயே கொண்டுவரப்பட்டுள்ளது. காரணம், அதில், நீண்ட காலமாக பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு பணி விசா வழங்குவதைக் கட்டுப்படுத்துதல், ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோருக்கான மருத்துவ உதவிகளை முழுமையாக நீக்குதல் முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும், சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும், வெளிநாட்டவர்கள் மீது கண்டிப்புடன் நடந்து, அவர்கள் அனைவரையும் நாடுகடத்துதலை விரைவாக்க உதவும் நோக்கத்தை கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்தியதரைக்கடல் பகுதியில், ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிக உதவியை வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...