tamilni 387 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் போலி சட்டத்தரணிகள் குறித்து எச்சரிக்கை

Share

கனடாவில் போலி சட்டத்தரணிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் போலி சட்டத்தரணிகள் தொடர்பில் மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் நகரிற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு உதவுவதாக கூறி அவர்களிடம் மோசடி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கனடாவில் குடியேறும் எண்ணத்தில் வருகை தரும் குடியேறிகளை இலக்கு வைத்து சட்டவிரோத சட்டத்தரணி கும்பல்கள் இயங்குவதாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த போலி சட்டத்தரணிகள் குடியேறிகளை சந்தித்து சில ஆவணங்களை செய்ய வேண்டியிருப்பதாக கூறி பணம் பெற்றுக்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையாக சட்டத்தரணிகள் அறவீடு செய்யும் தொகையை விடவும் கூடுதல் தொகையை இவர்கள் குடியேறிகளிடம் அறவீடு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மோசடிகளில் ஈடுபடும் அதிகளவானவர்கள் சட்டத்தரணியாக கியூபெக்கில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் அல்லது சொந்த நாட்டில் சட்டத்தரணிகளாக செயற்பட்ட குடியேறிகள் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர்களுக்கு கனடாவில் முறைப்படி சட்டத்தரணியாக பிரதிநிதித்துவம் செய்யும் தகுதி கிடையாது எனவும் இவ்வாறான நபர்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...