12 23
உலகம்செய்திகள்

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

Share

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரை ட்ரம்ப் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆனால், பிரித்தானியாவின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக ட்ரம்பின் புதிய நண்பரான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் கூறிவருகிறார்.

உண்மை என்னவென்றால், ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் எண்ணமே ஸ்டார்மருக்கு இல்லை.

இன்னொரு விடயம், அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம் அல்ல.

ஆக, அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான Karen Pierce என்பவர்தான் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ட்ரம்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங் உட்பட பலரும் தங்கள் பிரதிநிதிகளாக தூதர்களைத்தான் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.

ஆக, ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்ததாக உலக அரசியல்வாதியாக மாறியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளதில் உண்மையில்லை!

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...