12 23
உலகம்செய்திகள்

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

Share

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரை ட்ரம்ப் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆனால், பிரித்தானியாவின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக ட்ரம்பின் புதிய நண்பரான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் கூறிவருகிறார்.

உண்மை என்னவென்றால், ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் எண்ணமே ஸ்டார்மருக்கு இல்லை.

இன்னொரு விடயம், அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம் அல்ல.

ஆக, அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான Karen Pierce என்பவர்தான் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ட்ரம்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங் உட்பட பலரும் தங்கள் பிரதிநிதிகளாக தூதர்களைத்தான் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.

ஆக, ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்ததாக உலக அரசியல்வாதியாக மாறியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளதில் உண்மையில்லை!

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...