12 23
உலகம்செய்திகள்

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

Share

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரை ட்ரம்ப் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆனால், பிரித்தானியாவின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்துள்ளதாக ட்ரம்பின் புதிய நண்பரான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் கூறிவருகிறார்.

உண்மை என்னவென்றால், ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் எண்ணமே ஸ்டார்மருக்கு இல்லை.

இன்னொரு விடயம், அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம் அல்ல.

ஆக, அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான Karen Pierce என்பவர்தான் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ட்ரம்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங் உட்பட பலரும் தங்கள் பிரதிநிதிகளாக தூதர்களைத்தான் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.

ஆக, ஸ்டார்மரை ட்ரம்ப் புறக்கணித்ததாக உலக அரசியல்வாதியாக மாறியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளதில் உண்மையில்லை!

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...