images 1 7
உலகம்செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

Share

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதோடு, மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டின் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் இன்று (நவம்பர் 17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

போராட்டம் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு: கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ந்த பின், ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராகப் போராடுவோரை சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்கை சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சர்வதேச குற்றத் தீர்ப்பாயம். மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அறிவித்தது. மேலும், அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் இந்தச் செயல், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர் சுட்டிக்காட்டினார். “ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும், உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.”

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...