images 1 7
உலகம்செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

Share

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதோடு, மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டின் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் இன்று (நவம்பர் 17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

போராட்டம் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு: கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ந்த பின், ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராகப் போராடுவோரை சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்கை சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சர்வதேச குற்றத் தீர்ப்பாயம். மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அறிவித்தது. மேலும், அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் இந்தச் செயல், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர் சுட்டிக்காட்டினார். “ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும், உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.”

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...