24 669ae8162405b
உலகம்செய்திகள்

மயான பூமியாக மாறும் பங்களாதேஸ் தலைநகர்! பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு

Share

மயான பூமியாக மாறும் பங்களாதேஸ் தலைநகர்! பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு

பங்களாதேஸ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் (Dhaka) ஏற்பட்டுள்ள கலவரத்தால் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அப்பகுதியில் ஊரடங்கு சட்டம் (Curfew) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸில் அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து, நேற்றையதினம் (19.07.2024) போராட்டக்காரர்கள் நரசிங்கிடி சிறைச்சாலை மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்தார்.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பங்களாதேஸ் இராணுவம் வீதிக்கு இறங்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, பங்களாதேஸின் அனைத்து தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளும் ஏறக்குறைய முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...