24 669ae8162405b
உலகம்செய்திகள்

மயான பூமியாக மாறும் பங்களாதேஸ் தலைநகர்! பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு

Share

மயான பூமியாக மாறும் பங்களாதேஸ் தலைநகர்! பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு

பங்களாதேஸ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் (Dhaka) ஏற்பட்டுள்ள கலவரத்தால் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அப்பகுதியில் ஊரடங்கு சட்டம் (Curfew) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸில் அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து, நேற்றையதினம் (19.07.2024) போராட்டக்காரர்கள் நரசிங்கிடி சிறைச்சாலை மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்தார்.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பங்களாதேஸ் இராணுவம் வீதிக்கு இறங்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, பங்களாதேஸின் அனைத்து தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளும் ஏறக்குறைய முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...