2 1 2 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதிக்க இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு

Share

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதிக்க இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு

லண்டனில் நினைவேந்தல் தினத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என இஸ்ரேல் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு லண்டன் பேரணியை கொடூரமான நடவடிக்கை மற்றும் வெறும் பாசாங்குத்தனமானது எனவும் ஜனாதிபதி ஈசாக் ஹெர்சாக் குற்றஞ்சாட்டினார்.

மட்டுமின்றி, அனைத்து கண்ணியமான நபர்களும் அணிவகுப்பை புறக்கணிப்பார்கள் எனவும், அரசாங்கம் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

காஸாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ஈசாக் ஹெர்சாக், இஸ்ரேல் மக்களுக்கு தங்களை காக்க உரிமை உண்டு என்றார். மேலும், ஈரானை கடுமையாக விமர்சித்த அவர், உலக நாடுகளில் உள்ள எனது நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,

ஐ.எஸ், ஹமாஸ் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் எங்கள் தலையை காவு கொள்ள துடிக்கிறார்கள், நாளை அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள் எனவும், உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் உண்மையான சவால் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...