24 662f4c2fa2465
உலகம்செய்திகள்

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

Share

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசாங்கம் சார்பில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிரானதென சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளதுடன் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளதுடன் தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் இந்த புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென ஈராக் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...

24 6694ccce98702
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா...