24 6604fb55783c5
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் தகவல்

Share

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் தகவல்

அமெரிக்காவின் பெல்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த டாலி சரக்கு கப்பல் ஏற்கனவே பல விபத்துக்களை எதிர்கொண்ட கப்பல் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில், பெல்ஜியத்தின் எண்ட்வெபர் துறைமுகத்திலிருந்து பிரேமாஹேவனுக்கு கப்பல் செல்லத் தொடங்கியபோது, ​​அது துறைமுகத்தின் தளத்தின் மீது மோதி பல மீட்டர் பகுதியை சேதப்படுத்தியது.

இது தவிர, 2018 ஆம் ஆண்டில் இருந்து மேலும் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் பாலத்தில் மோதியதில் கப்பலில் நிரம்பியிருந்த 13 கொள்கலன்கள் சேதமடைந்ததாகவும், அபாயகரமான பொருட்கள் இருந்த கொள்கலன் கடலுக்குள் விழுந்துள்ளதா எனவும் அமெரிக்க கடலோர காவல்படை குழு ஆராய தொடங்கியுள்ளது.

கடலில் விழுந்த கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின் பின்னர் அந்த கப்பலில் இருந்து சுமார் 1.8 மில்லியன் கேலன் டீசல் தண்ணீரில் கசியும் அபாயம் உள்ளதாகவும், அந்த அபாயம் குறித்து கடலோர காவல்படை குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...