rtjy 83 scaled
உலகம்செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

Share

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நர்கிஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டம் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய துயரங்களுடன்தான் நிகழ்ந்திருக்கிறது.

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். இதில் ஐந்து முறை அவர் குற்றவாளி என்றும் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறை தண்டனையுடன் 154 கசையடிகளையும் நர்கிஸ் முகம்மதி பெற்றுள்ளார்.

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையல் அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 66dfd5556ba12
செய்திகள்இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: அநுர அரசு உறுதி! – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர குமார...

124787881
செய்திகள்உலகம்

கனடா பிரதமரைச் சந்திக்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப்: ஆசியப் பயணத்தில் புதிய சர்ச்சை

ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தனது ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு...

17334765974
செய்திகள்இலங்கை

தாயும் மூன்று வயது மகனும் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறில் கொலை-தற்கொலையா என சந்தேகம்

காலி – படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...