OIP 8
உலகம்செய்திகள்

மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள்: பிரித்தானிய அறிவியலாளர்கள் சாதனை

Share

மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்கள் பிரித்தானிய அறிவியலாளர்கள் சிலர்.

பிரித்தானிய விமான நிறுவனம் ஒன்று, மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. Gloucestershireஇல் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளர்கள் மனிதக் கழிவிலிருந்து விமானங்களை இயக்க உதவும் மண்ணெண்ணெயை உருவாக்கியுள்ளார்கள்.

Firefly Green Fuels என்னும் அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் (James Hygate), எளிதில், அதிகம் கிடைக்கும் ஒரு கச்சாப்பொருளிலிருந்து எரிபொருள் ஒன்றை உருவாக்க விரும்பினோம், மனிதக் கழிவுதான் எக்கச்சக்கமாக கிடைக்கிறதே, அதையே பயன்படுத்தி எரிபொருளை உருவாக்க திட்டமிட்டோம் என்கிறார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளரான Dr செர்கியோ லிமா (Dr Sergio Lima) என்பவருடன் இணைந்து எரிபொருளை உருவாக்கும் முயற்சிகளைத் துவங்கியுள்ளார் ஜேம்ஸ். லிமாவும் Firefly Green Fuels நிறுவனத்தில் ஆய்வு இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

மனிதக் கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட மண்ணெண்ணெயை பரிசோதித்தபோது, அது அப்படியே மண்ணெண்ணெயைப் போல செயல்பட்டதுமட்டுமல்ல, சாதாரண விமான எரிபொருளைவிட அது 90 சதவிகிதம் குறைவான கார்பன் வாயுக்களையே வெளியேற்றியதும் ஆச்சரியத்தை உருவாக்கியது.

தற்போது, அந்த எரிபொருள், அதாவது, உயிரி மண்ணெண்ணெய், ஜேர்மனியிலுள்ள விமான ஆய்வு மையத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும், பிரித்தானிய ஆய்வு மையங்களும் அந்த எரிபொருள் தொடர் சோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றன. பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவுகள், அந்த உயிரி மண்ணெண்ணெய் விமான எரிபொருளைப்போலவே செயல்படுவதாக தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வு வெற்றிகரமாக முடியுமானால், மனிதக் கழிவிலிருந்து, பிரித்தானியாவின் விமான எரிபொருள் தேவையில் 5 சதவிகிதம் சந்திக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....