இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை
உலகம்செய்திகள்

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான பயண ஆலோசனையை மீளாய்வு செய்ய அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் அவதானமாக இருக்குமாறு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், உணவுப் பொருட்களுக்கும் மருந்து தட்டுப்பாடும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களிடம், அதிக கட்டணம் வசூலிப்பது, கடன் அட்டை மோசடி, கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச் செயல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...