tamilni 215 scaled
உலகம்செய்திகள்

நடுவானில் திடீரென தடுமாறிய சர்வதேச விமானம்!

Share

நடுவானில் திடீரென தடுமாறிய சர்வதேச விமானம்!

அவுஸ்திரேலியாவில் இருந்து நியுசிலாந்திற்கு பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (11.3.2024) திங்களன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.58 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சம்பவத்தில் 50 பயணிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிட்னியிலிருந்து அவுக்லாண்ட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தி நடுவானில் திடீரென விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானம் தடுமாறத் தொடங்கியது என லட்டம் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால் விமானம் அவுக்லாண்டில் தரையிறங்கியதும் பயணிகள் தயார் நிலையில் நின்ற அம்புலன்ஸில் ஏற்றப்பட்டனர்.

எங்கள் அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர்.

பயணிகளில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டோ ஹோன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...