24 663b1a73db069
உலகம்செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள அறிவித்தல்

Share

சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள அறிவித்தல்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் தங்களுடைய விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய வங்கி கணக்கு சேமிப்பு தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல் ஒரு சர்வதேச மாணவர், அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் A$29,710 ( இலங்கை ரூபாவில் 5,866,960) இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த அக்டோபரில், A$21,041 (ரூபா 4,155,055) அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 (4,839,106) அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தியிருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த தொகையை மீண்டும் உயர்த்தியுள்ளது.

இதேவேளை சேமிப்பு கணக்குகள் தொடர்பாக தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...